100 நாடுகளுக்கு மேல் பரவியது.. சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வேரியண்ட்.. ஹூ
ஜெனீவா: கொரோனா வைரஸ்களைவிட இந்த டெல்டா வகை வேரியண்ட்கள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அடுத்து கொரோனாவின் 3ஆவது அலை தீவிரமாகும் என தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை வைரஸ்கள் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குநரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்டா வகை கொரோனா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக மாறக் கூடும். அனைத்து வகையான கொரோனா வைரஸ்களை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் 75 லட்சம் மாடர்னா வகை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த வைரஸானது பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
டெல்டா வேரியண்ட் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெல்டா வேரியண்ட்தான் இந்தியாவில் கொரோனா 2ஆவது வகைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications