Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நபிகள் நாயகத்தை தரக்குறைவாக பேசிய இந்து டெய்லரை கழுத்தை அறுத்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக பேசிய இந்து மதத்தை சேர்ந்த டெய்லர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

வங்கதேசத்தில் உள்ள டங்கைல் மாவட்டத்தில் இருக்கும் துபைல் கிராமத்தை சேர்ந்தவர் நிகில் சந்திரா ஜோர்டர்(50). டெய்லர். அவர் தனது வீட்டிலேயே ஒரு பகுதியை கடையாக வைத்து துணி தைத்து வந்துள்ளார்.

Derogatory remarks against Prophet: ISIS takes credit for hacking Hindu tailor to death in Bangladesh

இந்நிலையில் சனிக்கிழமை பைக்குகளில் வந்த மூன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் ஒரு பையை நிகில் வீட்டில் விட்டுச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி முகமது அப்துல் ஜலீல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மூன்று பேர் நிகிலின் வீடு புகுந்து அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பையில் 3 முதல் 4 வெடிகுண்டு போன்ற பொருட்கள் இருந்தது. நிகில் கடந்த 2012ம் ஆண்டு நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக பேசியதாக உள்ளூர் மூஸ்லீம்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரின்பேரில் அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாகத் தான் தீவிரவாதிகள் அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்றார்.

முன்னதாக தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பேசி வந்த இரண்டு பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெட்டிக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+