கணவர், 17 வயது சிறுமியுடன் உறவு... அச்சத்தில் கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கை டாக்டர்!
மெல்போர்ன்: மேற்கு ஆஸ்திரேலியாவில் தனது கணவர் மற்றும் 17 வயது சிறுமியுடன் சேர்ந்து உறவு கொண்ட பெண் டாக்டர் ஒருவர், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சமரி லியநாகே என்ற பெண் டாக்டர். இலங்கையைச் சேர்ந்த இவரது கணவர் பெயர் தினேந்திரா அதுகோரலா. இவர்களுக்கு 17 வயது சிறுமி ஒருவர் பார்ட்டியில் அறிமுகமானார். மூவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். இது செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கும் போனது.

சம்பவத்தன்று மூவரும் சேர்ந்து உறவில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென சமரிக்கு அச்சம் வந்துள்ளது. எங்கே தனது செயலை கணவர் வெளியில் யாரிடமாவது உளறி விடுவாரோ என்று அஞ்சினார். இதனால் கணவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து, படுக்கையில் படுத்திருந்த கணவரை சுத்தியலால் பலமாக அடித்துக் கொலை செய்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சமரியைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர் கொலை செய்ததற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. இவரது கணவர் தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுமாறு மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். அது தாங்காமல்தான் கொலை செய்தார் என்றும் அரசுத் தரப்பு வக்கீல்கள் தங்களது வாதத்தின்போது தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமியுடன் கடந்த 2014 முதல் இந்தத் தம்பதிக்குத் தொடர்பு இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் பலமுறை மூவரும் வீட்டிலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமிக்கு இருவரும் நிறைய கிப்ட் கொடுத்துள்ளனராம். அதை சிறுமி கோர்ட்டில் வாக்குமூலத்தினப்போது தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications