5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?
இந்தியா ஐஎன்சி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் லட்வா, இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்த தமது கண்ணோட்டத்தை முன்வைத்தார்.
லண்டன்: இந்தியா ஐஎன்சி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் லட்வா, இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் இங்கிலாந்து, இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்த தமது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா ஐஎன்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா ஐஎன்சி நிறுவனமானது முகம் தெரிந்த அல்லது அறியப்பட்ட எத்தனையோ நிறுவனங்களை ஊக்கப்படுத்தியும் வருகிறது.

பிரிக்சிட்டுக்கு பிந்தைய இங்கிலாந்து மற்றும் தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியா இடையேயான இருதரப்பு உறவுக்கும் இந்தியா ஐஎன்சி முக்கியப் பங்காற்றி வருகிறது.
உலகின் பொருளாதார ரீதியாக 5-வது மற்றும் 6-வது இடங்களில் உள்ள இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனடிப்படையில்தான் இங்கிலாந்து- பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒருங்கிணைப்பு மாநாடு ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது.
5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக ஒருங்கிணைப்பு மாநாட்டை இந்தியா ஐஎன்சி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இம்மாநாட்டில் இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் ஜூன் 22-ந் தேதி விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.
சர்வதேச அளவில் தொழில்துறை, அரசியல், ராஜதந்திரம், கலாசாரம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கின்றர்.
இந்தியா- பிரிட்டன் விருதுகளை
காமன்வெல்த் எண்டர்பிரைஸ் மற்றும் முதலீட்டு கவுன்சில் தலைவர் லார்ட் மார்லாண்ட்,
சர்வதேச வர்த்தகத்துக்கான இணை செயலாளர் பாரி கார்டினர் எம்பி
சர்வதேச அபிவிருதிக்கான முன்னாள் இணை செயலாளர் பிரிதி படேல் எம்பி
பார்தி எண்டர்பிரைசஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டர்
எழுத்தாளர் பர்கா தத்
ஸ்டார்கவுண்ட் தலைமை செயல் அதிகாரி எட்வினா டன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்/
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மிகவும் அதிக அளவில் பங்காற்றிய 100 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட இருக்கின்றனர்.
தூதரக கோப்பை: காமன்வெல்த் பிரமுகர்கள் பங்கேற்கும் ஒருநாள் கோல்ப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிரிட்டன் ஏசியன் டிரஸ்ட் உதவியுடன் இது நடத்தப்படுகிறது.
பிரிக்சிட் வரை இங்கிலாந்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் வர்த்தக உறவை கொண்டுள்ளது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்பு 1991-ம் ஆண்டு இந்தியா தமது பொருளாதார நிலைமையை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான உயிர்ப்புடனான பாலமாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.
இருநாடுகளிடையேயான நல்லுறவு தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு. இந்தியா- இங்கிலாந்து இடையேயான தொழில்துறை மற்றும் சர்வதேச உறவுகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த ஒருங்கிணைப்பு மாநாட்டில் விவாதிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நுழைவு வாயிலாக திகழுகிறது இங்கிலாந்து. இந்த வகையில் இங்கிலாந்து முட்டுக்கட்டைகளை தகர்த்து இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும்.
21-ம் நூற்றாண்டில் இருநாடுகளிடையேயான அரசியல், பொருளாதார உறவுகளில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்யக் கூடிய வகையில் இம்மாநாடு அமையும். வளர்ச்சி, கல்வி, தொழில்நுட்படம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications