நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு
நிலநடுக்கத்தால் துருக்கியும், சிரியாவும் சிதைந்து போயிருக்கின்றன. 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ளதால் துருக்கி அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலர் அதுதான் கடைசி இரவாக இருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது. கட்டிடங்கள் பயங்கரமாக ஆடியதில் விழுந்து நொறுங்கின.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. கண்விழித்தவர்கள் உயிர் பிழைக்க வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக சரிந்தன. இதில் குடியிருப்புகளுக்குள் இருந்தவர்கள் உயிரோடு சமாதியாகினர். நிலநடுக்கம் தேசிய பேரழிவாக அறிவிக்கப்பட்டது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. தோண்ட தோண்ட குவியல் குவியலாக சடலங்கள் தென்பட்டன. எங்கும் மரண ஓலம் கேட்டது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடராக உலக நாடுகள் கருதுகின்றன. துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. அங்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பல நூறு உயிர்கள் பறிபோயுள்ளன.

துருக்கியில் பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. இந்நிலையில், நிலநடுக்கத்தில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி நாட்டு அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி அதிபர், இது மிகப்பெரிய தேசிய பேரழிவு என்று அறிவித்தார்.
உறக்கத்தில் இருந்து விழிக்காமலேயே பல உயிர்கள் பறிபோயுள்ளன. உறவினர்களை காணாமல் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் தேடி வருகின்றனர். துருக்கியிலும் சிரியாவிலும் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications