ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு- எகிப்தில் 2 விமான நிலைய ஊழியர்கள் 2 கைது!!
கெய்ரோ: தீவிரவாதிகளால் 224 பயணிகளுடன் வெடித்து சிதறடிக்கப்பட்ட ரஷ்யா விமானத்தில் வெடிகுண்டுகளை கொண்டு செல்ல உதவியதாக எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்தில் இருந்து கடந்த அக்டோபர் 31-ந் தேதி 224 பேருடன் பயணித்த ரஷ்யா விமானம் ஷினாய் தீபகற்பத்தில் வெடித்து சிதறியது. இதில் 224 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உலகை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விமானத்தில் சென்ற தீவிரவாதி வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடித்து சிதறச் செய்ததாக ரஷ்யா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு எடுத்துச் செல்ல உதவியதாக எகிப்து நாட்டின் ஷாம் எல் ஷேக் விமான நிலைய ஊழியர்கள் 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications