ஆப்கானிஸ்தானில் காரில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்கும்?
காபூல்: ஆப்கானிஸ்தானில் கந்தகார் சோதனை சாவடி அருகே காரில் குண்டு வெடித்ததில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கந்தகார் சோதனை சாவடி அருகே இன்று மாலை காரில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் இறந்திருக்கக் கூடும் என தெரிகிறது.
டிரம்பின் மூட்டை முடிச்சுகளை கட்டவைத்த பிடன்.. அடுத்து அமெரிக்க வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?
கடந்த இரு தினங்களில் கந்தகாரில் நிகழ்ந்த இரண்டாவது தாக்குதல் இது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த தாக்குதலில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.
A car bomb explosion was reported near a security outpost in Kandahar, Afghanistan this evening. Casualties feared: Afghanistan's TOLOnews
— ANI (@ANI) November 8, 2020
கடந்த 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வன்முறை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தோஹா நடந்து வந்த அமைதி பேச்சுவார்த்தையின் போதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.