ஆய்வு என்ற போர்வையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்... ஜப்பானில் ஒரு ‘டாக்டர் பிரகாஷ்’!
டோக்கியோ : மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் சுமார் 100க்கும் அதிகமான பெண்களை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து விற்பனை செய்த நபரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்தவர் 54 வயது ஹிடயுக்தி நொகுச்சி. உறங்கும் போது பெண்களின் இரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட நொகுச்சி, இதற்கென பல பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, ஆய்வு செய்வதாகக் கூறி அப்பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் நொகுச்சி. மேலும் அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ஆபாச இணைய தளங்களுக்கு விற்று அதன் மூலமாக 85000 டாலருக்கும் (52 லட்சம் ரூபாய்) மேல் சம்பாதித்திருக்கிறார்.
நொகுச்சி குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மீதான குற்றங்கள் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நொகுச்சியைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் நொகுச்சியால் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்றும் ஜப்பான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் முறையாக டாக்டருக்குப் படித்தவரா என்று தெரியவில்லை. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது அட்டூழியத்திற்கு டோக்கியோ, ஒசாகா, சிபா, டோசிகி, சிஷுவோகா ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நொகுச்சிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications