ஜாவா கடலில் குண்டுவெடித்தது போல் சப்தம்.. பல அடி உயரம் சீறிய அலைகள்.. நடந்தது என்ன?.. மீனவர்கள்
ஜகார்த்தா: ஜாவா கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற சப்தம் கேட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து பார்னியோ தீவில் உள்ள பாண்டியநாக்கிற்கு ஸ்ரீவிஜயா எஸ்ஜே 182 என்ற போயிங் விமானம் நேற்று மதியம் 2.36 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான கண்காணிப்பை இழந்தது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 59 பேர் இருந்தனர். இது மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.

இடம் ஒத்து போனது
இதுகுறித்து இந்தோனேசிய ராணுவத் தளபதி ஹாடி ஜாஜன்டோ கூறுகையில் கடற்படையினர் அந்த விமானத்தின் சிக்னலை கண்டுபிடித்துள்ளனர். அந்த சிக்னலும் விமானம் விபத்துக்குள்ளான போது விமானிகள் இறுதியாக தொடர்பு கொண்ட இடமும் ஒன்றோடு ஒன்று ஒத்து போகிறது.

12 மணி நேரத்திற்கு மேல்
இதையடுத்து நீர் மூழ்கும் வீரர்களை இறக்கி விமான பயணிகளை தேடி வருகிறோம். விமான விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என தெரியவில்லை என்றார். இதுகுறித்து நேரில் பார்த்த மீனவர்கள் அதிகாரியிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.

குண்டுவெடித்தது
அதில் ஜகார்த்தா கடற்கரையின் வடக்கு பகுதியில் ஆயிரம் தீவுகள் பகுதி அருகே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சனிக்கிழமை மதியம் 2.40 மணிக்கு கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற ஒரு சப்தத்தை கேட்டோம்.

சுனாமியா
அது குண்டுவெடிப்பா இல்லை சுனாமியா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தோம். கடல் அலைகளும் ஆக்ரோஷமாக உயர்ந்தன. அப்போது கனமழை பெய்து வந்தது. அதனால் எங்களால் என்ன சப்தம் என்பதை தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து எங்கள் படகுக்கு அருகே விமான பாகங்களும், விமான எரிப்பொருளும் மிதப்பதை கண்டோம்.

துண்டிப்பு
அப்போதுதான் ஏதோ ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்தோம் என்றனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே ராடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்படும் போது 8,839 மீட்டர் உயரத்தில் பறந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications