உலகிலேயே முதன்முறையாக... சிறுவயதில் அகற்றப்பட்ட கருப்பை திசு மூலம் தாயான பெண்!
கின்சஷா: சிறு வயதிலேயே அகற்றப்பட்ட கருப்பை திசுவை உயிர்ப்பித்து அதன் மூலம் குழந்தைப் பேறை அடைந்துள்ளார் ஒரு பெண். உலகிலேயே இதுபோல நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மிக அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயது புற்றுநோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பெண் பூப்பெய்தும் முன்பே அவரது கருப்பை திசு அகற்றப்பட்டு விட்டது. பின்னர் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான். இதுபோல நடப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.

வரலாற்று சாதனை...
இந்த கருப்பை திசுவை மீண்டும் உடலில் செலுத்தி அதன் மூலம் கருப்பையில் கரு முட்டைகள் உருவாகி தற்போது அந்தப் பெண் கருத்தரித்துள்ளார் என்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்து, குழந்தையும் நல்ல நலமுடன் உள்ளது.
காங்கோ நாட்டுப் பெண்...
இந்தப் பெண்ணுக்கு தற்போது 29 வயதாகிறது. அவரது 11வது வயதில் கருப்பை திசு அகற்றப்பட்டது. இப்பெண் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு சிக்கில் செல் அனீமியா இருப்பது 5வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது.
போன்மேரோ சிகிச்சை...
இந்த நிலையில் அவரது 11வது வயதில் குடும்பத்தோடு பெல்ஜியத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவரது நோய் முற்றியுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு போன் மேரோ மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
கீமோதெரப்பி...
அவரது சகோதரரிடமிருந்து எலும்பு மஜ்ஜை எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு கீமோதெரபியும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கீமோதெரப்பி செய்தால் கருப்பை பாதித்து கருமுட்டை வளர்ச்சி முற்றிலும் நின்று போய் விடும் என்பதால் தெரிப்புக்கு முன்பாகவே கருப்பின் வலது புறத்தை மட்டும் தனியாக எடுத்தனர். பின்னர் அதை உறைநிலையில் வைத்து பராமரித்தனர்.
ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் 15 வயதானபோது அவரது உடலில் இருந்த ஒரு பகுதி கருப்பையானது செயலிழந்தது. இதையடுத்து அவருக்கு மாத விடாய் வருதற்கு ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
மீண்டும் அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் அப்பெண்ணுக்குத் திருமணமானது. இதையடுத்து பாதுகாக்கப்பட்டு வந்த கருப்பையை அவரது உடலில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி அவர் கர்ப்பமுற டாக்டர்கள் உதவினர். தற்போது அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications