உலகிலேயே முதன்முறையாக... சிறுவயதில் அகற்றப்பட்ட கருப்பை திசு மூலம் தாயான பெண்!
கின்சஷா: சிறு வயதிலேயே அகற்றப்பட்ட கருப்பை திசுவை உயிர்ப்பித்து அதன் மூலம் குழந்தைப் பேறை அடைந்துள்ளார் ஒரு பெண். உலகிலேயே இதுபோல நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மிக அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயது புற்றுநோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பெண் பூப்பெய்தும் முன்பே அவரது கருப்பை திசு அகற்றப்பட்டு விட்டது. பின்னர் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான். இதுபோல நடப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.

வரலாற்று சாதனை...
இந்த கருப்பை திசுவை மீண்டும் உடலில் செலுத்தி அதன் மூலம் கருப்பையில் கரு முட்டைகள் உருவாகி தற்போது அந்தப் பெண் கருத்தரித்துள்ளார் என்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்து, குழந்தையும் நல்ல நலமுடன் உள்ளது.
காங்கோ நாட்டுப் பெண்...
இந்தப் பெண்ணுக்கு தற்போது 29 வயதாகிறது. அவரது 11வது வயதில் கருப்பை திசு அகற்றப்பட்டது. இப்பெண் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு சிக்கில் செல் அனீமியா இருப்பது 5வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது.
போன்மேரோ சிகிச்சை...
இந்த நிலையில் அவரது 11வது வயதில் குடும்பத்தோடு பெல்ஜியத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவரது நோய் முற்றியுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு போன் மேரோ மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
கீமோதெரப்பி...
அவரது சகோதரரிடமிருந்து எலும்பு மஜ்ஜை எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு கீமோதெரபியும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கீமோதெரப்பி செய்தால் கருப்பை பாதித்து கருமுட்டை வளர்ச்சி முற்றிலும் நின்று போய் விடும் என்பதால் தெரிப்புக்கு முன்பாகவே கருப்பின் வலது புறத்தை மட்டும் தனியாக எடுத்தனர். பின்னர் அதை உறைநிலையில் வைத்து பராமரித்தனர்.
ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் 15 வயதானபோது அவரது உடலில் இருந்த ஒரு பகுதி கருப்பையானது செயலிழந்தது. இதையடுத்து அவருக்கு மாத விடாய் வருதற்கு ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
மீண்டும் அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் அப்பெண்ணுக்குத் திருமணமானது. இதையடுத்து பாதுகாக்கப்பட்டு வந்த கருப்பையை அவரது உடலில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி அவர் கர்ப்பமுற டாக்டர்கள் உதவினர். தற்போது அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications