ஊழல் வழக்கில் முன்னாள் சீன அமைச்சருக்கு 15 ஆண்டுகள் சிறை: கோர்ட் அதிரடி
பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் துணை பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ டாங்ஷெங்கிற்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னாள் துணை பொது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் லீ டாங்ஷெங். அவர் 1996ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவியில் இருக்கையில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார். சீனாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் பாதுகாப்புத் துறை தலைவர் ஜோ யாங்காங்குடன் அவர் தொடர்பு வைத்திருக்கிறார். ஜோ கடந்த 2012ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஜோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் தொடர்புடைய லீ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். டியான்ஜின்னில் உள்ள நீதிமன்றத்தில் லீ மீதான ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications