பலாத்கார வழக்கில் முன்னாள் இந்திய-அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை
வாஷிங்டன்: அமெரிக்காவில் பலாத்கார வழக்கில் முன்னாள் இந்திய-அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாசசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வோர்செஸ்டர் காவல் துறையில் சேர்ந்த முதல் இந்திய-அமெரிக்கர் ரஜத் ஷார்தா(34). இந்நிலையில் அவர் பணியில் இருக்கையில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் ரஜத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரஜத் 10 ஆண்டு காலம் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு நடந்தபோது தான் குற்றமற்றவன் என்று ரஜத் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் தீர்ப்பு பற்றி அவரது வழக்கறிஞர் பீட்டர் எல் எட்டன்பர்க் கூறுகையில்,
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜத் குற்றமற்றவர். அவர் மதத்தின் மீது அதிக ஈடுபாடு உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.