சொத்துப் பிரச்சினை: 86 வயது முதியவருக்காக தற்காலிக நீதிமன்றமாக மாறிய நட்சத்திர விடுதி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சீக்கியர்களின் மரபுப்படி தனக்கு சொத்து அளிக்கப் படவில்லை என 86 வயது முதியவர் தன் மகன் மீது தொடர்ந்த வழக்கில், முதியவரின் வயதைக் காரணம் காட்டி ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றைத் தற்காலிக நீதிமன்றமாக செயல்படுத்தி சாட்சியம் வாங்கியுள்ளார் பிரிட்டன் நிதிபதி ஒருவர்.

பிரிட்டனில் உள்ள ராடிஸ்ஸன் புளூ எட்வர்டியன் குழுமங்களின் தலைவரான 62 வயது ஜஸ்மிந்தர் சிக் மீது அவரது தந்தையான 86 வயது பால் மொஹிந்தர் சிங் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், சீக்கியர்களின் ‘மிடாக்ஸரா' மரபுப்படி தனக்குரிய பங்கை தனது மகன் தனக்கு அளிக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சக்கர நாற்காலி துணையுடன் வாழ்ந்து வரும் மொஹிந்தரால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வர இயலவில்லை. எனவே, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து நட்சத்திர விடுதியைத் தற்காலிக நீதிமன்றமாக மாற்றி, மொஹிந்தரின் சாட்சியைப் பதிவு செய்தார் நீதிபதி வில்லியம் பிளாக்பர்ன்.

சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பு மொத்தம் ரூ. 4,200 கோடி என்ற போதும், மொஹிந்தர் வழக்குத் தொடுத்துள்ளது ரூ 504 கோடி மதிப்புடைய சொத்திற்காகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+