பாரிஸ் தீவிரவாத தாக்குதல்-பிரான்ஸில் எமெர்ஜென்சி பிரகடனம்; எல்லைகள் மூடல், ராணுவம் குவிப்பு
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குள் புகுந்துள்ள தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களை அடுத்து அங்கு தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரான்ஸ் நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் பாரிஸில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படாக்லன் கலை காட்சியகத்தில் 100 பேரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து படுகொலை செய்தனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 160 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாரிஸ் நகரில் உள்ள மூன்று உணவகங்கள், ஒரு கலையரங்கம், தேசிய விளையாட்டு மைதானம் அருகே ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தொடர்தாக்குதல்களை அடுத்து நள்ளிரவுக்கு முன்னதாக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பிச் செல்லமுடியாதவாறு நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பாரிஸில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளே இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications