பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடை.. அதிர்ச்சியில் கார் நிறுவனங்கள்!
பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 2040ஆம் ஆண்டுக்குள் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பாரீஸ்: பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 2040ஆம் ஆண்டுக்குள் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் கார் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனித குலத்துக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதனை தடுக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது.

2040க்குள் முடிவுக்கு வரும்
இதுதொடர்பாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹூலட் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி 2040 ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸில் பெட்ரோல் டீசல் வாகனங்கள் விற்பனை முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

கடினமான இலக்குதான்
இந்த இலக்கை அடைவது என்பது கடினம் தான் என்ற அவர் குறிப்பாக வாகன உற்பத்தியாளர்களுக்கு, கஷ்டமான ஒன்றாக இருக்கும் என்றும் புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலஸ் ஒப்புக் கொண்டார்.

நடைமுறைபடுத்தியே தீருவோம்
இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றும் அமைச்சர் நிக்கோலஸ் கூறியுள்ளார். வாகனங்களுக்காக பார்த்தால் மக்கள் வாழ முடியாது என்ற அவர், இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படும் என திட்டவட்டமாக கூறினார்.

கார் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
பிரான்ஸ் அரசின் இந்த அதிரடி முடிவால் கார் உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசின் முடிவால் மக்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவார்கள் என்பதால் விற்பனை பாதிக்கும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வேலை பறிபோகும் ஆபத்து
மேலும் அரசின் இந்த அறிவிப்பால் பல பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தயாரித்துள்ள வாகனங்களை எப்படி மாற்றுவது என்றும் கார் நிறுவனங்கள் யோசிக்க தொடங்கியுள்ளன.

மின்சாரத்தில் இயங்கும் கார்
இதனிடையே அரசின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சுவீடனின் கார் நிறுவனமான ஜியான்ட் வால்வோ மின்சாரத்தில் ஓடும் கார்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இனி பெட்ரோல் டீசலில் இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
-
ஈரான் போர் எதிரொலி.. மத்திய அரசின் அடுத்த வரி குறைப்பு.. பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு ஜீரோ வரி..! -
விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications