"மரண ஓலம்.." 1400 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாக்கிய 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள முக்கிய நாடு ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பூகம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்குச் சீரமைப்புப் பணிகளில் நடந்து வரும் சூழலில் மீண்டும் அங்கு வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 1400 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். மேலும், பலர் தங்கள் வாழ்விடங்களை இழந்தனர். இந்த நிலநடுக்கம் ஆப்கனில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அங்கு மீட்புப் பணிகள் மெல்ல நடந்து வருகிறது.

Fresh 5 2 Earthquake Hits Afghanistan Amid Rescue Efforts for Devastating 6 0 Quake that killed 1400

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.2 ரிக்டரில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம் ஞாயிறு நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் தான் மையம் கொண்டு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் எசானுல்லா கூறுகையில், "முதல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குனார் மாகாணத்தில் தான் இந்த பூகம்பமும் உணரப்பட்டது. பொதுவாகவே முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு பின்னதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்படும். அதுபோன்ற பின்னதிர்வு தான் இது. இந்த பின்னதிர்வுகள் கூடுதல் உயிரிழப்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை" என்றார்.

1400+ உயிரிழப்பு

அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குனார் மாகாணத்தில் மட்டும் 1,411 பேர் உயிரிழந்ததாகவும், 3,124 பேர் காயமடைந்ததாகவும் தாலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதேபோல அண்டை மாகாணமான நங்கர்ஹாரில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

நிலைமை மோசம்

ஆப்கானிஸ்தான் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டிற்குக் கிடைக்கும் உதவிகளும் குறைந்துவிட்டன.. இதனால் இதுபோன்ற பேரிடர்களுக்குப் பதிலளிக்கும் திறன் ஆப்கானிஸ்தானுக்கு இல்லை. பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவு ஆப்கனில் பல லட்சம் பேரை பாதிக்கலாம் என்று ஆப்கானிஸ்தானுக்கான ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இந்திரிகா ரத்வட்டே கூறினார்.

குனாரில் 5,400க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு பகலாகத் தேடுதல் பணிகள் தொடர்ந்தன என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத் தெரிவித்தார். பாதிப்புகள் மிக மோசமாக இருந்ததால் பல பகுதிகளைச் சாலை வழியாக அடைய முடியவில்லையாம். இதனால் மாற்று வழிகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

மோசமான பாதிப்பு ஏன்

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இது பூமியின் மேற்பரப்பிற்கு வெறும் எட்டுக் கிலோமீட்டர் கீழே ஏற்பட்டது. இதுபோல ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும்.. ஆப்கானிஸ்தானில் கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மண் செங்கல் மூலமே கட்டப்படும் நிலையில், அவை நிலநடுக்கங்களைத் தாங்காது. லேசான ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டாலே அவை அழிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+