அஜ்மானில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டு
அஜ்மான்: அஜ்மானில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அஜ்மானில் கல்ப் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் பிரசாந்த் ஹெக்டே, மொகனத் முகம்மது சுல்தான், மஹ்மூத் பாரூக் முகம்மது எல்மாதி உள்ளிட்டோருக்கு கல்ப் மருத்துவ பல்கலைக்கழக தலைவர் தம்பே முகைதீன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதுகள் தங்களது பணியில் மென்மேலும் சிறப்பான வகையில் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

தம்பே மருத்துவமனை துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் புஜேரா உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இங்கு 20 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அஜ்மானின் முதலாவது தனியார் மருத்துவமனை என்ற பெருமையையும் இந்த மருத்துவமனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் அக்பர் முகைதீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications