ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி.. போர்ச்சுக்கலின் அன்டோனியா குட்டெரெஸ் முன்னிலை
நியூயார்க்: அடுத்த ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்விலும் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஐ.நா. பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா. வரலாற்றில் முதன் முறையாக விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
போர்ச்சுகல் முன்னாள் பிரதமரும், ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த நான்கு சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், நேற்றைய சுற்றில் பதினைந்து உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில், 12 ஆதரவு ஓட்டுகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அடுத்த கட்ட தேர்வு அக்டோபர் 5ல் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications