கத்தார் தாக்குதல்.. உயிர் தப்பிய ஹமாஸ் தலைவர்கள்! இஸ்ரேல் தோல்வி
தோஹா: அமெரிக்க முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. போரில் இதுவரை 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

எனவே போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அழுத்தம் காரணமாக அமெரிக்காவே போர் நிறுத்தம் தொடர்பாக முன்மொழிவுகளை கொடுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பாக பேச்சுவார்த்தையை ஹமாஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். பேச்சவார்த்தை நடந்துக்கொண்டிருந்தபோது சுமார் 16 இஸ்ரேல் போர் விமானங்கள், பேச்சுவார்த்தை நடந்த இடத்தை தாக்கியிருக்கின்றன. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தங்கள் தலைவர்கள் உயிர்பிழைத்திருப்பதாக ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், "இந்த தாக்குதல் ஆக்கிரமிப்பின் குற்றவியல் தன்மையையும், உடன்படிக்கைக்கான எந்தவொரு வாய்ப்பையும் சீர்குலைக்கும் அதன் நோக்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இந்த தாக்குதல் மோசமான குற்றம், அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறிய செயல்" எனவும் விமர்சித்திருக்கிறது.
தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயாவின் மகன் மற்றும் அவரது உதவியாளர்களில் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க நிர்வாகமே பொறுப்பு என ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினர் சுஹைல் அல் விமர்சித்திருக்கிறார்.
இந்த தாக்குதலை கோழைத்தனம் என கத்தார் கடுமையாக விமர்சித்திருக்கிறது. கத்தார் தவிர சவுதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் என அனைத்து அரபு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தது என அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டாலும், கத்தார் இதனை மறுத்திருக்கிறது. எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் விமானத்தளம் கத்தாரில் இருந்த போதும், மூன்றாம் நாடு ஒன்று கத்தார் மீது தாக்குதலை ஏற்படுத்தியிருப்பது, கத்தாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications