சபிக்கப்பட்ட குழந்தை.. 9 வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது ஹாரி பாட்டர் புதிய புத்தகம்
லண்டன்: 9 வருடங்களுக்கு பிறகு ஹாரி பாட்டர் சீரிஸ் புத்தகம் இவ்வாண்டு வெளியாக உள்ளது என்ற தகவல் வாசகர்களை குதுகலிக்க செய்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர், ஜே.கே.ரவ்லிங் எழுதிவரும் ஹாரிபாட்டர் என்ற பெயரிலான புத்தகங்கள் உலகமெங்கும் உள்ள வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
1997ம் ஆண்டு 'ஹாரிபாட்டர் அன்டு பிளாசபர் ஸ்டோன்' என்ற பெயரில் வெளியான ஹாரிபாட்டர் நாவல்தான் இந்த சீரிசின் முதல் நாவலாகும். இது உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விற்பனை அபாரம்
1998ம் ஆண்டு ஹாரிபாட்டர் அன்டு சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் என்ற பெயரிலும், அதற்கு அடுத்த ஆண்டான, 1999ல், ஹாரிபாட்டர் அன்டு பிரிசனர் ஆப் அஸ்கபான் என்ற பெயரிலும் நாவல் எழுதி அவையும் விற்பனையில் சக்கைபோடு போட்டன.

9 வருடங்களுக்கு பின்
2000, 2003, 2005ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த ஹாரிபாட்டர் நாவல்களை ரவ்லிங் வெளியிட்டார்., கடைசியாக 2007ம் ஆண்டு ஹாரிபாட்டர் அன்டு டெத்லி ஹலோவ்ஸ் என்ற பெயரில் நாவல் வெளியிட்டிருந்தார் ரவ்லிங். இதன்பிறகு 9 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு 8வது ஹாரிபாட்டர் நாவல் வெளியாகிறதாம்.

சபிக்கப்பட்ட குழந்தையாம்
வரும் ஜூலை 31ம் தேதி, 'ஹாரிபாட்டர் அன்டு கர்ஸ்ட் சைல்ட்' (ஹாரிபாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும்) என்ற பெயரில் நாவல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு உலகமெங்கும் உள்ள ஹாரிபாட்டர் நாவல் வாசிப்பாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்லைனிலும் விற்பனை
இங்கிலாந்தின் லிட்டில் பிரவுன் நிறுவனம் புத்தகத்தை வெளியிடுகிறது. ஆன்லைனிலும் புத்தகம் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. ஹாரிபாட்டர் சீரிஸின் முதல் புத்தகம் வெளியாகி அடுத்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications