அமெரிக்காவில் தொடரும் வன்மம்.. இந்து கோவில் சுவரில் பிசாசு வழிபாட்டு சின்னத்தை வரைந்த மர்ம மனிதர்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலின் மீது மர்ம ஆசாமிகள் மோசமான படங்களை விசமத்தனமாக ஸ்பிரே பெயிண்டால் வர்ணம் பூசி உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள 2 கோவில்கள் சேதபடுத்தப்பட்டன. கடந்த பிப்ரவரி 15-ந் தேதி சியாட்டில் மாநகரத்தில் இந்து கோவிலில் சில அடையாளம் தெரியாத ஆசாமிகள் கோவிலில் வெளியே போ என எழுதி வைத்து இருந்தனர்.
Vandals target a Old Lake Highlands Hindu temple with anti-religious & gang graffiti. Neighbors are appalled. pic.twitter.com/MLugOmtEh5
— Zahid Arab (@ZahidArabFox4) April 17, 2015 அது போல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கெண்ட் பகுதியில் உள்ள இந்து கோவிலை சேதபடுத்தி அங்குள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சுவரில் பயம் என எழுதி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ல ஓல்டு ஏரியில் உள்ள இந்து கோவிலில் 666 என்ற பிசாசு வழிபாட்டு எண்ணை விஷமதனமாக ஸ்பிரே பெயிண்டால் யாரோ சில ஆசாமிகள் படம் வரைந்து உள்ளனர்.
இதை தொடர்ந்து கோவில் பாதுகாப்புக்குக்காக சுற்றிலும் சுவர் எழுப்ப பக்தர்கள் முடிபு செய்து உள்ளனர். இந்து மற்றும் இந்து அல்லாதவர்களும் சேர்ந்து கோவிலின் சேதத்தை சரி செய்ய உதவிகள் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications