ஜெய்சங்கர் சம்பவம்! இந்தியாவின் ராஜாங்க வெற்றி.. 8 கடற்படை வீரர்களை கத்தார் ரிலீஸ் செய்தது எப்படி?
டோஹா: இந்தியாவுக்கு பெரிய ராஜதந்திர வெற்றியாக 8 இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்துள்ளது. தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கத்தாரில் சிறை செய்து வைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), இன்று அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கத்தாரில் இந்த முடிவை வரவேற்று உள்ளது. அல் தஹ்ரா குளோபல் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் உளவாளிகள் என்று கூறி கைது செய்யப்பட்டார்கள்.

கத்தாரில் இந்திய அரசுக்காக உளவு பார்த்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேரில் ஏழு பேர் கத்தாரில் இருந்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
கத்தாரில் கைது செய்து வைக்கப்பட்டு இருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்தியர்களின் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது. 8 பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். கத்தார் அரசின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். என்று வெளியுறவுத்துறை தங்கள் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கர் சம்பவம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தொடர் முயற்சி காரணமாக இவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை நிர்வாகிகள் ஓய்வு பெற்ற பின் வெளிநாட்டில் பணியாற்றினால்.. அவர்கள் வெளிநாட்டில் உளவு செய்கிறார்கள் என்ற சந்தேகம் வருவது இயல்பு.
உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு துறை நிர்வாகி ஒருவர் அங்கே ஓய்வு பெற்று இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட நேரத்தில்.. அந்த அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அதிகாரியை உளவு பார்க்கும் அதிகாரியாக சந்தேகம் கொள்வது இயல்பே.
அப்படிதான் கத்தாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை நிர்வாகிகள் உளவாளிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெய் சங்கர் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை கத்தார் அரசுடன் தீவிரமாக நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்தது. மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து ஜெய் சங்கர் போன் மூலமும், நேரடியாகவும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் . இவர்கள் உளவாளிகள் இல்லை என்று இந்திய அரசு வைத்த வாதத்தை கத்தார் ஒருவழியாக் ஏற்றுக்கொண்டுள்ளது.
கத்தாரில் கைது செய்யப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் -- கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ரகேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications