திருமண நாள் பரிசு கேட்டா விவகாரத்தை கொடுத்தார் இம்ரான்கான்...மாஜி மனைவி ரெஹாம்
இம்ரான்கானிடம் திருமணநாள் பரிசு கேட்ட தமக்கு விவகாரத்துதான் கிடைத்தது என மாஜி மனை ரெஹாம் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தஹ்ரீக் இ இன்ஷாப் கட்சித் தலைவருமான இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டதற்கு விவகாரத்தை பரிசாக கொடுத்தார் என கூறியுள்ளார் மாஜி மனைவி ரெஹாம்.
இம்ரான்கானின் 2-வது மனைவி டிவி பத்திரிகையாளர் ரெஹாம். இருவரும் கடந்த ஆண்டு விவகாரத்து செய்து கொண்டனர். இவர்களது திருமணம நாள் அக்டோபர் 31-ந் தேதி.
இதையொட்டி டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரெஹாம், கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி திருமண நாள். அப்போது இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டிருந்தேன்... ஆனால் அவர் பரிசு தருவதற்கு பதிலாக விவகாரத்தைத் தந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.
இம்ரான்கான் அரசியலில் ஈடுபடுவதை ரெஹாம் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 30-ந் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
முன்னதாக ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்திருந்தார் இம்ரான்கான். 9 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்குப் பின் 2004-ம் ஆண்டு ஜெமீமாவை விவகாரத்து செய்தார் இம்ரான்கான். இம்ரான்கான்- ஜெமீமா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.