கஷ்ட காலத்திலும் ஆதரவா இருந்தீங்க... இனி என் வேலைய மட்டும் பாருங்க... தீயா இருக்கும் - கிம் ஜாங்
சியோல்: இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ள வட கொரிய அதிபர், இனி வரும் காலங்களில் தான் கடுமையாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது, அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உள்ளார்.
திடீரென்று பல நாட்கள் மாயமாவது, அரசு உயர் அதிகாரிகள் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவது என அவரது பல செயல்கள் தொடர்ந்து உலக நாடுகளால் விமர்சிக்கப்படும். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங், புத்தாண்டு தினத்தில் தனது நாட்டு மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தவறுகளுக்கு ஸாரி
அதில் கடினமான காலங்களில்கூட ஆளும் கட்சியை நம்பி ஆதரித்ததற்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்குப் பொதுமக்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனி தீயா வேலை செய்வேன்
சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைத் தான் அறிவேன் என்றும் அதற்காகவும் மக்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "எனது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மக்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை முன்னரே கொண்டு வரவும் இன்று முதல் நான் கடுமையாக உழைப்பேன்" என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

அஞ்சலி
புத்தாண்டின்போது, கிம் ஜாங், மூத்த தலைவர்களுடன் சென்று வட கொரியாவின் முந்தைய ஆட்சியாளர்களாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினார். வட கொரியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் புதிய ஐந்தாண்டு திட்டத்தை கிம் ஜாங் வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா இல்லாத வட கொரியா
இதுவரை தனது நாட்டில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், இத்தகவல்கள் பொய்யானவை என்று தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க அந்நாட்டு விதித்துள்ள மிகக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வட கொரிய பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications