சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் 'அல் கன்சா பெண்கள் படை"
ரக்கா: சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 'பெண்கள் படையணி' உருவாக்கப்பட்டுள்ளது.
சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவின் ரக்கா உள்ளிட்ட நகரங்களையும் ஈராக்கில் மொசூல் உள்ளிட்ட நகரங்களையும் கைப்பற்றி தனிதேசமாக பிரகடனப்படுத்தி உள்ளது.

அல் கன்சா
சிரியாவில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெண்கள் படையணி உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு 'அல் கன்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

என்ன பணி?
ஷரியத் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்பதுதான் இந்த பெண்கள் படையணியின் முதன்மைப் பணிகளில் ஒன்று.

பெண்கள் மட்டுமே..
இது குறித்து ரக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ். -ன் தளபதிகளில் ஒருவரான அபு அகமது கூறுகையில், பெண்களுக்கு என்று தனி படையணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படைப் பிரிவில் சேருவோருக்கு தனியே அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

பெண்களை கண்காணிக்க
கடந்த மாதம் ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றிய பின்னர்தான் இப்படையணி உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை முழுமையாக பெண்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அப்படி கடைபிடிக்காத பெண்களை கைது செய்து தண்டித்தல் ஆகியவற்றை இந்த படையணி மேற்கொள்ளும்.

போராளிகளின் மனைவிகளும்..
இந்தப் படையணியில் தற்போது ரக்கா நகரைச் சேர்ந்த பெண்களோ அல்லது சிரியாவின் இதர பகுதிகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள முஜாஹிதீன்களின் மனைவியரோ இணைந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பெண் படையணியின் சிறையில்..
அண்மையில் இந்த படையணியால் கைது செய்யப்பட்ட ஜைனாப் என்ற இளம்பெண் கூறுகையில், நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆயுதமேந்திய பெண்கள் படை திடீரென என்னை சுற்றி வளைத்து கைது செய்தது. பின்னர் அவர்களது இடத்துக்கு கொண்டு சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

எச்சரித்து விடுவிப்பு
என்னிடம் இஸ்லாமிய வழிபாடு, நோன்பு குறித்து கேள்விகளை துப்பாக்கி முனையில் கேட்டனர். பின்னர் தெருவில் தனியாக நடந்து சென்றதாலும் இஸ்லாம் பெண்களுக்குரிய உடையை முறையாக அணியாத காரணத்தாலுமே என்னை கைது செய்ததாக கூறினர். பின்னர் எச்சரித்து விடுதலை செய்தனர். ஆறு மணி நேரம் அவர்களது சிறையில் இருந்தேன் என்கிறார்.

அச்சுறுத்துகிறதா?
ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ பெண்களை அச்சுறுத்தும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடந்து கொள்கிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications