இந்தியா-சீனா போட்டி ஆசியாவிற்கு நல்லதல்ல: தலாய் லாமா
நியூயார்க்: இந்தியா சீனா போட்டி போட்டுக் கொள்வது ஆசியாவிற்கு மட்டுமல்ல, திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல எனத் தெரிவித்துள்ளார் புத்தமதத் தலைவரான தலாய்லாமா.
இருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் புத்தமதத் தலைவரான தலாய் லாமா. அங்கு செய்தியார்களிடம் பேசுகையில் இ்ப்படித் தெரிவித்தார் லாமா.
தலாய் லாமாாவின் பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

போட்டி நல்லது
இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்வது ஆசிய கண்டத்திற்கு மட்டுமின்றி திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல. பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான நல்ல உறவுகள், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம். அதேபோல் கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும்.

ஸி ஜின்பிங் தைரியமானவர்
தற்போது சீன அதிபராக இருக்கும் ஸி ஜின்பிங், ஊழலை எதிர்த்து தைரியத்துடன் சிறப்பாக செயலாற்றக் கூடியவர். ஆனால் தணிக்கை முறை பரவலாக நடைபெற வேண்டும்.

உண்மையான வளர்ச்சி கிராமங்களில்தான் வேண்டும்
சீனாவில் உண்மையான வளர்ச்சி என்பது, கிராமப்புற பகுதிகளில்தான் ஏற்பட வேண்டும். இதன் பொருள் நகரங்களை உருவாக்குவது அன்று.

பெய்ஜிங் பெரும் நகரமாக உருவெடுக்கும்
மேலும், சீன நீதித்துறை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுவர். சீனாவின் பெய்ஜிங் நகரம் மிகப்பெரிய பொருளாதார நகரமாக உருவெடுக்கும்.

மனித உயிர்களுக்கு மதிப்பில்லையே
சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை ஆகியவையே அமெரிக்காவின் கொள்கைகளாகும். ஆனால் ஆப்பிரிக்கா, சிரியா போன்ற நாடுகளில் நீதிக்கொள்கைகள் இல்லாத காரணத்தினால் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

நீதிக்கொள்கை இல்லாவிட்டால் வளம் இல்லை
நீதிக்கொள்கையினை இழந்துவிட்டால் எந்தவொரு நாட்டிற்கும் வளமான எதிர்காலம் இல்லை.

நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்
மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் காலநிலைகள் வேறுபடுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடதுருவம் உருகுவதாக கூறுகின்றனர். நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications