ராகினே மாகாண பயங்கரவாத வன்முறை- சூகியிடம் கவலை தெரிவித்த மோடி
ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழும் ராகினேவில் பயங்கரவாத வன்முறைகள் தொடர்பான மியான்மரின் கவலையை இந்தியா பகிர்ந்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேபிடா: மியான்மரின் ராகினே மாணத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பயங்கரவாதிகள் வன்முறை தொடர்பாக அந்நாட்டின் ஆலோசகர் சூகியிடம் இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேபிடாவில் பிரதமர் மோடியும்- சூகியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
ராகினே மாகாணத்தில் பயங்கரவாத வன்முறை, ராணுவத்துக்கு எதிரான வன்முறை மற்றும் அப்பாவி உயிர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதில் மியான்மர் நாட்டின் கவலையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

மியான்மரின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க அனைத்துதரப்பும் ஒன்றாக இணைந்து வழியை கண்டறிய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
அதே நேரத்தில் அனைவரும் அமைதி, நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயக மாண்புகளையும் பெறவும் வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூகி, சில வாரங்களுக்கு முன்னர் மியான்மருக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எங்களுடன் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்த இந்தியாவுக்கு நன்றி. இந்த மண்ணில் பயங்கரவாதம் வேரூன்ற அனுமதிக்காத வகையில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என நம்பிக்கை கொள்கிறோம் என்றார்.
ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்கள் வங்கதேச குடியேறிகள் என முத்திரை குத்துகிறது மியான்மர் நாடு. அண்மையில் ரோஹிங்யா முஸ்லிம்களின் அமைப்பு ஒன்று ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications