ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்கள்.. ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு.. வெளியுறவுத்துறை பரபர விளக்கம்
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியர்களை மீட்கவும் உறுதி அளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குஜராத்தைச் சேர்ந்த ஹமில் மங்கூக்யா என்ற வாலிபர் ட்ரோன் தாக்குதலின் போது உயிரிழந்தார். இதையடுத்தே இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

இதன் தொடர்ச்சியாக முகமது ஹப்சன் என்ற ஐதராபாத்தை சேர்ந்த வாலிபரும் போரில் உயிரிழந்தர். அதுபோக, இந்தியர்கள் ஏழு பேர் ரஷ்ய ராணுவ உடையில் தாங்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. ரஷ்யாவில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து சிபிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது. இதில், நாடு முழுவதும் ஏழு நகரங்களில் நேற்று சோதனை நடத்தியது.
கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தி தொடர்பாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போலி வாக்குறுதிகள் அளித்து வேலைக்கு ஆள் எடுத்து ரஷ்யாவுக்கு அனுப்பிய ஏஜெண்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல் வழக்கு அவர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளது.
இந்தியர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தும் விவகாரத்தில் ரஷ்யாவிடம், இந்திய அரசு தனது கவலையை தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விரைவாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.
10 இடங்களில் சோதனை: முன்னதாக நேற்று வேலை வாய்ப்பு என்ற பெயரில் ரஷ்யா- உக்ரைன் பகுதிகளில் பணியாற்ற இந்தியர்களை அழைத்து சென்ற விசா கன்சல்டன்சி நிறுவனங்களுக்கு எதிராக சோதனை நடைபெற்றது. டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர், மதுரை, சென்னை என 7 நகரங்களில் உள்ள 10 இடங்களில் சோதனையானது நடைபெற்றது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்










Click it and Unblock the Notifications