போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்!
பெய்ஜிங்: சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வி அடையும், எல்லை பிரச்சனை போராக மாறினால் அதில் இந்திய வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது.
இவர்கள் சமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை மிகவும் காரசாரமாக அமைந்து இருந்தது. எல்லை பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா இதில் குற்றஞ்சாட்டியது. சீனா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறுவதாக இந்தியா புகார் வைத்துள்ளது.

இந்தியா புகார்
இந்த மீட்டிங்கை தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் இயங்கி வரும், அரசுக்கு நெருக்கமான குளோபல் டைம்ஸ் இதழில் முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த மீட்டிங் குறித்து அதில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியா சீனா இடையே போர் வந்தால் அதில் சீனாதான் வெற்றிபெறும். இந்தியா அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

சீனா பலம்
தேசிய அளவிலும், பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் இந்தியாவை விட சீனாதான் வலிமையான நாடு. இந்தியாவை விட சீனா பல மடங்கு சக்தி கொண்டது. இந்தியா சீனா இரண்டும் பெரியநாடாக்கள் தான். ஆனால் ராணுவம், மோதல் என்று வந்தால் சீனாதான் சிறப்பானது. இந்தியா கண்டிப்பாக சீனாவை சீண்டினால் தோல்வி அடையும்.

இந்தியா வெற்றி
எல்லை மோதல் போராக மாறினால் இந்தியாவிற்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இரண்டு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் இப்போது ஆலோசனை செய்துள்ளனர். இரண்டு நாட்டு உறவை இது மேம்படுத்தும் என்று நம்புகிறோம். எல்லையில் இதனால் பதற்றம் தணியும் என்று நம்புகிறோம். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிய வேண்டும் .

தேசிய வாத கொள்கை
தேசியவாத கொள்கை காரணமாக இந்தியாவில் மக்கள் எல்லை பிரச்சனை மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா தனது மக்களை கட்டுப்படுத்த வேண்டும். தங்கள் மக்களுக்கு தேவையானதை மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்களின் கவனத்தை முன்னேற்றத்தை நோக்கி திருப்ப வேண்டும். சீனா எல்லையில் அமைதியை மட்டுமே விரும்புகிறது. ஆனால் இந்தியா எல்லையில் அத்துமீற நினைக்கிறது, என்று அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications