போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்!
பெய்ஜிங்: சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வி அடையும், எல்லை பிரச்சனை போராக மாறினால் அதில் இந்திய வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது.
இவர்கள் சமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை மிகவும் காரசாரமாக அமைந்து இருந்தது. எல்லை பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா இதில் குற்றஞ்சாட்டியது. சீனா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறுவதாக இந்தியா புகார் வைத்துள்ளது.

இந்தியா புகார்
இந்த மீட்டிங்கை தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் இயங்கி வரும், அரசுக்கு நெருக்கமான குளோபல் டைம்ஸ் இதழில் முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த மீட்டிங் குறித்து அதில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியா சீனா இடையே போர் வந்தால் அதில் சீனாதான் வெற்றிபெறும். இந்தியா அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

சீனா பலம்
தேசிய அளவிலும், பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் இந்தியாவை விட சீனாதான் வலிமையான நாடு. இந்தியாவை விட சீனா பல மடங்கு சக்தி கொண்டது. இந்தியா சீனா இரண்டும் பெரியநாடாக்கள் தான். ஆனால் ராணுவம், மோதல் என்று வந்தால் சீனாதான் சிறப்பானது. இந்தியா கண்டிப்பாக சீனாவை சீண்டினால் தோல்வி அடையும்.

இந்தியா வெற்றி
எல்லை மோதல் போராக மாறினால் இந்தியாவிற்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இரண்டு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் இப்போது ஆலோசனை செய்துள்ளனர். இரண்டு நாட்டு உறவை இது மேம்படுத்தும் என்று நம்புகிறோம். எல்லையில் இதனால் பதற்றம் தணியும் என்று நம்புகிறோம். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிய வேண்டும் .

தேசிய வாத கொள்கை
தேசியவாத கொள்கை காரணமாக இந்தியாவில் மக்கள் எல்லை பிரச்சனை மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா தனது மக்களை கட்டுப்படுத்த வேண்டும். தங்கள் மக்களுக்கு தேவையானதை மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்களின் கவனத்தை முன்னேற்றத்தை நோக்கி திருப்ப வேண்டும். சீனா எல்லையில் அமைதியை மட்டுமே விரும்புகிறது. ஆனால் இந்தியா எல்லையில் அத்துமீற நினைக்கிறது, என்று அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications