கணவரை எரித்துக் கொன்ற அமெரிக்க இந்திய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை
டெக்சாஸ்: அமெரிக்காவில் கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் மத்திய டெக்சாஸ் பகுதியின் டிராவிஸ் நகரில் வசித்து வந்த பிமல் பட்டேல்(29) என்பவர் கடந்த 2012 -ம் ஆண்டு பலத்த தீக்காயங்களுடன் சேன் அண்டோனியோ ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 6 மாத காலமாக உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவரது இளம் மனைவி ஷ்ரியா பட்டேல்(27) பெட்ரோலை ஊற்றி கணவனை எரித்துக் கொன்றது அம்பலமானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
இந்திய பெண்ணான ஷ்ரியா பட்டேல் லண்டனில் படித்து, பெற்றோருடன் துபாயில் வாழ்ந்து வந்தார். அப்போது, ஒருவரை காதலித்து வந்த ஷ்ரியா பட்டேல், நாளடைவில் காதலனால் ஒதுக்கப்பட்டார்.
அப்போது, இந்தியாவில் உள்ள திருமண தகவல் மையத்தின் வாயிலாக அமெரிக்காவில் வாழும் ஒரு மாப்பிள்ளையை தேடிப் பிடித்து ஷ்ரியா பட்டேலுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஆரம்பத்தில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர் வேறொரு காரணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்தார்.
தன்னை நிராகரித்த முன்னாள் காதலனுக்கு ‘அமெரிக்காவில் எனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது பார்' என்பதை சவால் விட்டு நிரூபிக்க இந்த திருமணம் உதவியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்ட ஷ்ரியா, பிமல் பட்டேலை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
ஆனால், திருமணத்துக்கு முன்னர் கூறப்பட்டது போல் பிமல் பட்டேல் அவ்வளவு வசதியானவர் அல்ல என்பதை தெரிந்து கொண்ட அவர் நாளடைவில் கணவரை வெறுக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், முன்னதாக செய்து வந்த ‘டெலி மார்க்கெட்டிங்' வேலையில் இருந்தும் பிமல் பட்டேல் நீக்கப்பட்டார். இதனால் வீட்டு வாடகையை கட்டவே சிரமப்பட்ட பிமலின் வாழ்க்கை நிலை ஷ்ரியாவின் ஆடம்பர வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போகவில்லை.
காதலனின் நினைவுகளும், ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசையும் ஷ்ரியாவின் மனதில் எழவே,சம்பவத்தன்று, குளியல் அறைக்கு பிமல் பட்டேலை அழைத்து சென்ற ஷ்ரியா, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றுள்ளார். இது போதுமான சாட்சியங்களின் மூலம் அமெரிக்காவின் டிராவிஸ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் ஷ்ரியா பட்டேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தார். ஏற்கனவே, 2 ஆண்டுகளை அவர் விசாரணை கைதியாக சிறையில் கழித்து விட்டதால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பரோலில் (விடுமுறை) விடுவிக்கப்படலாம்.
முழு தண்டனை காலத்தையும் நிறைவு செய்த பின்னர் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications