சவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்!
Recommended Video

சவுதி: சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள்.
இவர்களில் கணிசமானோர் தங்கள் குடும்பத்தோடு தங்கியுள்ளனர். ஆனால், சவுதி அரேபிய அரசு எடுத்த ஒரு முடிவு இப்போது குடும்பஸ்தர்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு
சவுதி அரேபியாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், பல்வேறு வகையான சேவைகளுக்கும் வரி விதிப்பை அதிகரித்துள்ளது. வருடாந்திர குடியிருப்பு கட்டணம் என்பது இதுவரை ஒரு குடும்பத்திற்கானதாக இருந்தது. இப்போது அதை தனி நபர்களுக்கானதாக மாற்றியுள்ளது சவுதி அரசு.

குடும்பஸ்தர்கள் சுமை
குடும்பம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு நபர்கள் மீதும் வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளதால், குடும்பஸ்தர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. இதனால் மனைவி, குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்ப துவங்கியுள்ளனர். தெலுங்கானா மக்கள் தாயகம் திரும்பி வருவதால் ஹைதராபாத்திலுள்ள பள்ளிகளில் விண்ணப்பங்கள் அதிக அளவுக்கு விற்று தீர்ந்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு
குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் எனபது தற்போது மாதம் 100 ரியாலாக உள்ளது. அது ஜூலை 1ம் தேதி முதல் 200 ரியாலாக உயர்த்தப்பட உள்ளது. அடுத்த வருடம் ஜூலை 1ம் தேதி இந்த தொகை 300 ரியாலாகவும், 2020ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் அது 400 ரியாலாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால், நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம், ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.72 லட்சம் செலவிட வேண்டியிருக்கும்.

சிபிஎஸ்இ முதல் சாய்ஸ்
இதையடுத்துதான், சவுதியில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கே திருப்பியனுப்பி வருகிறார்கள். இந்தியா வரும் குடும்பத்தார், குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டம் உள்ள பள்ளிகளில், விண்ணப்பித்து வருகிறார்கள். இதற்கு காரணம், சவுதி உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ வகையிலான பாடத் திட்டத்தில் கல்வி கற்று கொடுப்பதுதான் ஆகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications