மும்பையில் யு.கே. பெண்ணைப் பார்த்து சுயஇன்பம் அனுபவித்த நபர்: மன்னிப்பு கேட்ட இந்திய குடிமகன்கள்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது அவரை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த இந்தியரின் செயலுக்காக சக இந்திய ஆண்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி ஹெமிங்ஸ்(27). அவர் இந்தியாவில் 3 மாதம் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது அவர் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார். மும்பைக்கு சென்ற அவர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருத்திருக்கிறார். அப்போது ஒரு இந்தியர் அந்த பெண் அருகே வந்து தனது ஆணுறுப்பை ஆடையில் இருந்து வெளியே எடுத்து அவரை பார்த்தபடியே சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.

இதை பார்த்த லூசி 3 நாட்களாக அதிர்ச்சியில் இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுள்ள லூசி தனது பிளாக்கில் இது குறித்து எழுதியுள்ளார். நான் மக்களுடன் பேச விரும்புபவள். ஆனால் இந்த சம்பவத்தை அடுத்து யாருடனும் பேச அச்சமாக இருந்தது. இது போன்று மீண்டும் நடக்குமா என்று யோசித்தேன். நடக்காது என்று தெரிந்தாலும் அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி 3 நாட்கள் இருந்தது. நான் உடல் முழுவதையும் மறைக்கும்படி லூசாக தான் ஆடை அணிந்திருந்தேன் என்று அவர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
லூசியின் பிளாக்கை படித்த இந்திய ஆண்கள், மும்பையில் நடந்த சம்பவத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். நீங்கள் எங்கள் நாட்டுக்கு சென்ற இடத்தில் இவ்வாறு நடந்துள்ளதை நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என ஒரு இந்தியர் லூசிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
வெட்கப்படுகிறேன். மன்னித்துவிடுங்கள் என்று மும்பை சம்பவத்திற்காக ஒரு இந்தியர் மன்னிப்பு கேட்டு லூசியின் பிளாக்கில் எழுதியுள்ளார்.
குறிப்பு: லூசியின் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications