ஓமனில் தற்கொலை செய்த இந்தியரின் உடலை அனுப்புவதில் சிக்கல்
ஓமன்: ஓமனில் பணியாற்றி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த நபரின் உடலை இந்தியா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோகன். வயது 52. ஓமனில் பணியாற்றி வந்த இவர் கடந்த டிசம்பர் 25ம் தேதியன்று இரவு தன்னுடைய வீட்டின் ஸ்டோர் ரூமில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு இந்திய தூதரகம் மூலமாக அவருடைய நண்பர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்குத் தேவையான அத்தியாவசியமான ஆவணங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் சில முக்கிய ஆவணங்கள் இல்லாததால், அப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அசோகன் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் அவர் ஓமனில் வசித்து வந்தார். அசோகன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது தற்கொலைக்கான பின்னணி காரணம் எதுவும் தெரியவில்லை என்று அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications