நியூசிலாந்தில் பெண்ணைப் பாராட்டிப் பேசியதற்காக தாக்கப்பட்ட இந்தியர் மரணம்
ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், ஒரு பெண் அணிந்திருந்த உடை நன்றாக இருக்கிறது என்று கூறியதற்காக, அப்பெண்ணின் காதலரால் சரமாரியாக தாக்கப்பட்ட இந்திய ஆசிரியர் மரணமடைந்துள்ளார்.
இதனால் நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மிகவும் மோசமான முறையில் படுகாயமடைந்து அந்த இந்தியர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த இந்தியருக்கு வயது 27. அவரது பெயர் தருண் அஸ்தானா. பயிற்சி ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் ஹோட்டலுக்கு அவர் போயிருந்தார். அங்கு ஒரு பெண் தனது காதலருடன் வந்திருந்தார்.
அந்தப் பெண் அணிந்திருந்த உடை நன்றாக இருந்ததாக உணர்ந்த அஸ்தானா, அவரை நெருங்கிப் பாராட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது காதலர் கிரான்வில்லி மெக்பேர்லான்ட், அஸ்தானாவை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் பலமாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் அஸ்தானா.
படுகாயமடைந்த நிலையி்ல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்தானா தற்போது உயிரிழந்துள்ளார்.
மெக்பேர்லான்ட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் உயிரிழப்பால் நியூசிலாந்து வாழ் இந்தியர்களிடையே பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications