ஈரான் - இஸ்ரேல் மோதலில் பலியான முதல் இந்தியர்.. ஓமனில் எண்ணெய் கப்பலில் டிரோன் தாக்குதலில் உயிரிழந்த சோகம்
Oman, Iran, Iran latest news, Israel iran, First Indian casualty in US-Iran conflict, First Indian casualty, oman, Oman says mariner killed as oil tanker hit by bomb via drone boat, ஓமன், இந்தியர் பலி, அமெரிக்கா ஈரான் தாக்குதலால் இந்தியர் ப
மஸ்கட்: ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு புறமும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓமன் வளைகுடா கடல் பகுதியில் மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது இன்று ஆளில்லா ட்ரோன் படகு தாக்குதல் நடத்தியதில், ஒரு மாலுமி உயிரிழந்ததாக ஓமன் அறிவித்து இருக்கிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஈரான் தலைவர் கமேனி கொலை
அணு ஆயுதத்தை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டிவந்தன. அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே ஈரான் மீது நேற்று முன்தினம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பெரிய அளவிலான வான் தாக்குதலில் ஈடுபட்டன. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் உள்ளிட்ட ராணுவத் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டன.
தலைநகர் தெக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவர் இறந்த தகவல் ஈரான் மற்றும் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரமாக தாக்கும் ஈரான்
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 800 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழி வாங்குவோம் என்று கூறிய ஈரான், இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பக்ரைன், குவைத், ஜோர்டான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலை ஈரான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இந்தியர் உயிரிழப்பு
இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பீதி அடைந்துள்ளனர். 3-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இந்த மோதலில் பலியாகியிருக்கிறார். இதனை ஓமன் உறுதி செய்துள்ளது.
ஓமன் வளைகுடா கடல் பகுதியில் மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது திங்கட்கிழமை ஆளில்லா ட்ரோன் படகு தாக்குதல் நடத்தியதில், ஒரு மாலுமி உயிரிழந்ததாக ஓமன் அறிவித்துள்ளது.
யார் தாக்குதல் நடத்தினர்?
எம்.கே.டி. வியோம் (MKD VYOM) என்ற அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓமன் செய்தி நிறுவனம் கூறியது. உயிரிழந்த மாலுமி இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மஸ்கட்டின் கடற்கரைக்கு அப்பால், ஓமன் வளைகுடாவில் இந்தத் தாக்குதல் நடந்து நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications