அமெரிக்கா: இமெயிலில் பாலியல் மிரட்டல்- இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை!
நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் பெண்ணிற்கு மின்னஞ்சல் வழியாக பாலியல் மிரட்டல் அளித்த குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறைதண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அவர், பெண் ஒருவருக்கு பாலியல் வன்முறை செய்துவிடுவதாக கூறி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார்.
கார்த்திகேயன் நட்ராஜன் என்னும் அந்த இந்திய இளைஞனுக்கு, அமெரிக்க பெடரல் நீதிமன்றம் 18 மாதங்கள், அதாவது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, கலிபோர்னியாவில் வசித்து வரும் நட்ராஜன் என்னும் அந்த இளைஞன் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு இளம்பெண்ணுக்கு அப்பெண்ணை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப் போவதாக கூறி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.இதனால்தான் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி நோரா பேரி ஃபிஸ்செர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications