குழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா!
ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக்கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் கோழிக்குஞ்சு வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
ஜகார்தா: ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி இருப்பது தான். இந்தியாவிலும் இப்பிரச்சினையின் வீரியம் மிக அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு நிலைமை இன்னும் மோசம்.
சாப்பிடுவதற்கு, தூங்க செல்வதற்கு என அனைத்து விஷயங்களுக்கும் செல்போன் இல்லாமல் குழந்தைகளிடம் காரியம் சாதிக்க முடிவதில்லை. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில், உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் தலைக்குனிந்தபடி செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் இங்கு ஏராளம்.

விழிப்புணர்வு
இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பெற்றோர்களிடையே தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது போதிய அளவில் இல்லாததால், பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

புதிய திட்டம்
இந்நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக்கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டில் உ ள்ள பாந்தங் எனும் நகரில் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சு வளர்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

கோழிக்குஞ்சு வளர்ப்பு
இத்திட்டத்தின் படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோழிக்குஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்னரும் அவற்றிற்கு மாணவர்கள் உணவு அளித்து வளர்க்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் பள்ளியிலே வைத்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கலாம்.

நம்பிக்கை
இத்திட்டம் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் செல்போனில் நேரம் செலவிடுவது குறையும் என பெற்றோர்கள் நம்புகின்றனர். எனவே பாந்தாங் நகர அதிகாரிகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications