தற்கொலைப் படையினருக்கு 'ஸ்பெஷல்' ஊசி போட்டு கொல்ல அனுப்பும் தலிபான்கள்!
காபூல்: சுய நினைவையும் பயத்தையும் போக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஒரு வித ஊசியைப் போட்டு பின்னரே தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு தீவிரவாத தலைவர்கள் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது.
இதை ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தில் பிடிபட்ட தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் கூறியுள்ளார். அனைத்து தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்கும் இந்த ஸ்பெஷல் ஊசி போடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஊசி போட்டதும் தாங்கள் மிகுந்த வெறியுடனும், விருப்பத்துடனும் தாக்குதலில் ஈடுபடும் எண்ணம் வரும் என்றும் அந்த தீவிரவாதி கூறியுள்ளார்.

சிறப்பு ஊசி
இதுகுறித்து கைது செய்யப்பட்ட ரகமதுல்லா என்ற அந்தத் தீவிரவாதி கூறுகையில், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன்பு அந்த தீவிரவாதிக்கு ஒரு ஊசி போடுவார்கள்.

சந்தோஷமாக போவார்கள்
அதுவரை இறுக்கமாக காணப்படும் அந்தத் தீவிரவாதி ஊசி போட்டவுடன் மாறி விடுவார். மிகுந்த உற்சாகத்துடன், ஒரு விதமான புத்துணர்ச்சியுடன், வெறி கொண்ட நிலையில், தனது இலக்கை நோக்கி விருப்பத்துடன் பயணிப்பார் என்று கூறியுள்ளார் ரகமதுல்லா.

பாகிஸ்தானில் பயிற்சி
ரகமதுல்லாவுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானில்தான் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பின்னர் அவர் காந்தஹார் மாகாணத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்டார்.

ஆளுநரைக் குறி வைத்து வந்தவர்
காந்தஹார் மாகாண ஆளுநரைக் கொல்லும் திட்டம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இவர் சிக்கி விட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications