ஈரான் விஷயத்தில் வாயை விட்ட டிரம்ப்! என்ன சொன்னாருன்னு பாருங்க.. மதுரோ நிலைமைதான் கமேனிக்கும்?
தெஹ்ரான்: சமீபத்தில் வெனிசுலாவில் நடந்த கலவரங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல ஈரான் விஷயத்திலும் தலையிட அடி போட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதாவது ஈரானில் நடக்கும் போரட்டங்களுக்கு உதவ முன்வருவதாக தெரிவித்திருக்கிறார்.
ஈரானில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் சுப்ரீம் லீடர் அயதுல்லா கமேனிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், அந்நாட்டு மக்கள் சுதந்திரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் சொன்னது என்ன?
ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, "ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது. மக்களின் இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்காவுக்கும்-ஈரானுக்கும் இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கிறது. ஈரானில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், பழமைவாதிகள் பிடியில் நாடு சிக்கியிருக்கிறது என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
மட்டுமல்லாது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். எனவே ஈரான் தனிமைப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் டிரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவின் கருத்து
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, "அமெரிக்கா ஈரானின் துணிச்சலான மக்களுக்கு ஆதரவளிக்கிறது" இதை மேற்கோள் காட்டி, "ரூபியோ நன்றாகச் சொன்னீர்கள். ஒபாமா நிர்வாகத்தைப் போல இம்முறை ஈரான் ஆயத்துல்லாவுக்கும் அவரது மதவாத நாஜி அடியாட்களுக்கும் எதிராக அமெரிக்கா உறுதியாக நிற்கும். மேலும், சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று டிரம்ப் கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். இந்த பதிவை டிரம்ப் ஷேர் செய்திருக்கிறார்.
அமெரிக்கா தலையிடும்
முன்னதாக, "ஈரான் பெரிய சிக்கலில் உள்ளது. மக்கள் சில நகரங்களைக் கையகப்படுத்தி வருவது போல் தெரிகிறது. நாங்கள் நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடந்த காலங்களில் செய்தது போல் மக்களைக் கொல்லத் தொடங்கினால், நாங்கள் தலையிடுவோம் என்று நான் மிக உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நிச்சயம், ஈரான் விஷயத்தில் அமெரிக்கா தலையிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் உடனான உரசலின்போது, ஈரானின் அணு மையத்தை அமெரிக்கா நேரடியாக தாக்கி அழித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தகது.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
ஈரான் கதை முடிந்தது? 'Mark 84 பாம்'.. டிரம்ப் வெளியிட்ட போட்டோவால் ஈரான் மக்கள் அலறல்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்!












Click it and Unblock the Notifications