Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் தொட்டோம்னு அமெரிக்காவே நினைக்கும் அளவுக்கு தாக்குவோம்.! வெளிப்படையாக எச்சரித்த ஈரான்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இந்தியப் பெருங்கடலில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கடலில் ஏற்பட்ட பேரழிவு எனச் சாடியுள்ள ஈரான், இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்கா வருத்தப்படும் அளவுக்குப் பதிலடி இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் 6வது நாளாகத் தொடர்கிறது. இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் வியாழக்கிழமை காலை தாக்குதல்களை நடத்தியது. இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததற்குப் பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Iran Warning To US Will Bitterly Regret This Says Iran After Submarine Torpedoes Warship IRIS Dena

அமெரிக்கா

அமெரிக்கா கடும் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்குத் தாக்குதல்களை நடத்துவோம் என்றும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்தியப் பெருங்கடலில், ஈரானின் 'டேனா' போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்தது. இதில் குறைந்தது 100க்கும் மேற்பட்ட கணக்கான ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கண்டித்தார்.

கொடூரம்

அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பதிவில், "ஈரானின் கரைகளில் இருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் ஒரு கொடூரமான செயலை அமெரிக்கா செய்துள்ளது. இந்தியக் கடற்படையின் விருந்தினராக இருந்த 'டேனா’ என்ற போர்க்கப்பல், கிட்டத்தட்ட 130 மாலுமிகளுடன், சர்வதேச கடல் பகுதியில் இருந்த கப்பலை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் தாக்கியுள்ளது. நான் சொல்வதைக் குறித்துக்கொள்ளுங்கள்: அமெரிக்கா தனது செயலுக்குக் கடும் வருத்தப்படும் அளவுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும்" என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்தார்.

சனிக்கிழமை அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த மோதலைத் தொடங்கின. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமையே கொல்லப்பட்டார். ஆயுதக் கிடங்கு மற்றும் அணுசக்தி திட்டம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானில் இருக்கும் கமேனி ஆட்சியைக் கவிழ்ப்பதும் ஒரு நோக்கம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா நினைப்பது நடக்கவில்லை. இதனால் தாக்குதல்கள் தொடர்கிறது. முடிவில்லாத போரை நோக்கி ஈரான் விவகாரம் செல்லுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

எப்போது முடியும்

பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவின் தாக்குதல் எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்துப் போர் விவகார அமெரிக்க அமைச்சக ஹெக்சித் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் நான்கு வாரங்கள் என்று சொல்லலாம்.. ஆனால் அது ஆறு வாரங்கள் ஆகலாம். எட்டு வாரங்கள் ஆகலாம். அல்லது மூன்று வாரங்களில் கூட முடியலாம். எதிரி சமநிலையற்ற நிலையில் உள்ளனர், அவர்களை அதே நிலையில் வைத்திருப்போம்" என்றும் அவர் கூறினார்.

சிக்கல் என்ன

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் தளங்களைக் குறிவைத்துத் தாக்குவதால் ஈரானின் தாக்குதல் திறன் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், போர் தொடர்ந்தால் அது அமெரிக்காவுக்கும் நஷ்டம் தான். ஏனென்றால் ஈரானுக்கு இந்த போரில் இழக்க எதுவும் இல்லை. இதனால் கடைசி வரை இறங்கி அடிக்கும். ஆனால், அமெரிக்காவுக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் இதற்குப் பெரிய தொகையைச் செலவிட வேண்டி உள்ளது. இதனால் போர் ஒரு வாரத்தைத் தாண்டினாலே டிரம்பிற்கு அழுத்தம் அதிகரிக்கும்!

ஈரானை பொறுத்தவரை அங்குக் குறைந்தது 1,045 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு அமெரிக்கப் படையினர் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+