இஸ்ரேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க..விளைவு மோசமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
டமாகஸ்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தலையிடாமல் தள்ளியே இருங்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்கா எச்சரித்ததை போல நேற்றிரவு ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றிரவு மட்டும் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியிருக்கிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றனர்.
இதுவரை பாலஸ்தீனம்-இஸ்ரேல் என இருந்த போார் தற்போது பாலஸ்தீனம், ஈரான் vs இஸ்ரேல் என மாறியிருக்கிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதுக்குழு,
"சட்டப்பூர்வமான பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் அடிப்படையில் ஈரான் எதிர்ப்பு நடவடிக்கையி8ல் இறங்கியுள்ளது. பதிலடி கொடுக்க ஈரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொறு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்க தலையிட நினைக்க வேண்டாம். விலகி இருப்பதே அவர்களுக்கு நல்லது" என்று எச்சரித்துள்ளது.
ஆனால், ஈரானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. மட்டுமல்லாது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்லாது, பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறது. அதாவது ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு உதவ அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், ஈரானின் பாதுகாப்பு படையை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்த இருக்கிறது.
மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்ய, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications