ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரம் செய்து அடிமைகளாக்கினர்: கதறும் யாஸிதி பெண்கள்
ஈராக்: இராக்கில் யாஸிதி இனப் பெண்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்றது குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த யாஸிதிகள் அந்தத் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த போது தாங்கள் அனுபவித்த கொடூரங்கள் குறித்து பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கின் சிஞ்சார் (Sinchar) பகுதியில் வாழும் யாஸிதி என்னும் சிறுபான்மையினத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
இவர்களில் பலரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கினர் தீவிரவாதிகள் 7000 யாஸிதி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாலியல் அடிமைகளாக்கப்பட்ட அவர்கள், விபச்சார சந்தைகளில் தீவிரவாதிகளால் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்த சில யாஸிதி பெண்கள் பிபிசி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
பாலியல் அடிமைகள்
கண்ணீர் மல்க அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளித்தது. விபச்சார சந்தைகளில் சில பெண்களும், சிறுமிகளும் வெறும் 12 டாலர்களுக்கு வாங்கப்பட்டனர்.
விலைக்கு விற்பனை
இதனை தொடர்ந்து வாங்கப்படாத பெண்களை தீவிரவாதிகள் அடித்து காயப்படுத்தி வலுக்கட்டாயமாக விற்றனர். விபச்சார சந்தையில் ஐரோப்பாவை சேர்ந்த ஜிகாதி ஒருவர் ஐந்து பெண்களை விலைபேசி வாங்கி சென்றார்.
பூப்பெய்தாத பெண்கள்
யாஸிதிகள் மற்றும் கிறிஸ்தவ பெண் அடிமைகள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் பூப்பெய்தாதப் பெண்களுடன் கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் எனவும் தீவிரவாதிகள் துண்டு பிரசுரம் ஒன்றில் அறிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு முயற்சி
மேலும் தீவிரவாதிகளின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார் எனவும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications