கொரோனா வைரஸ் ஆய்வில் அஜாக்கிரதை... சீனாவிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வவ்வால்கள் கடித்ததை வூகான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.
உலகையை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எப்படி பரவியது அதன் தோற்றுவாய் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. வூகானில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக முதலில் தகவல் வெளியாகிய நிலையில் இப்போது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், வூகான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்பு விதிமுறைகளுக்கு நேர் மாறாக, இன்னும் சொல்லப்போனால் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ள எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு நடத்தியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமல் ஆய்வு நடத்துவது போன்ற வீடியோ வெளிவந்துள்ளதால் ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் சீனா அஜாக்கிரதை போக்குடன் இருந்தது அம்பலமாகியுள்ளது. இதனிடையே இதேபோல் மற்றொரு ஆராய்ச்சி நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், குகையில் வவ்வால்களிடம் நடத்திய ஆய்வின் போது கையுறையை கிழித்துக்கொண்டு கையில் கூர்மையான ஊசி குத்தியது போன்று இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா எந்தளவுக்கு மெத்தனமாக கையாண்டிருக்கிறது என்பது இப்போது தெரிய வருகிறது. இதனிடையே தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி தேவையில்லை என சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதனை மீறி சீனாவின் வூகான் நகரத்துக்கு சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் கொரோனா வைரஸின் தோற்றுவாய் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் தொடர்பாக முழுமையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications