For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்தாத் ராணுவ தளத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்! 300 ராணுவ வீரர்கள் பலி!!

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வான்வழித் தாக்குதல்களுக்கு இடையே ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ராணுவ தளத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அம்முகாமில் இருந்த 300 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாக்தாத் அருகே உள்ள ஈராக் ராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அம்முகாமில் இருந்த 300 ராணுவ வீரர்களை கொலை செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இது போல் ஷியா பிரிவினர் பெருமளவில் உள்ள பல இடங்களில் கொடூர தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். மேலும் சப் அல் போர் நகரில் கையெறி குண்டுகள் வீசியதில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

English summary
Islamic State jihadists have claimed responsibility for overwhelming an Iraqi army base near Baghdad and killing nearly 300 soldiers in the attack, CNN reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X