ஆள் சேர்த்துவிடு, ரூ.6.5 லட்சம் பரிசு பெறு: தீவிரவாதிகளுக்கு ஆசை வார்த்தை காட்டும் ஐஎஸ்

Subscribe to Oneindia Tamil

ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பணப் பரிசு அளிக்கப்படுகிறது.

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ். ஆனால் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளின் சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

சம்பளம் ஒரேயடியாக குறைக்கப்பட்டுள்ளதால் பல தீவிரவாதிகள் அந்த அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.

பரிசு

பரிசு

தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள்

டாக்டர்கள்

அமைப்பில் சேர்பவர்களில் கம்ப்யூட்டர் நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட நன்கு படித்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தற்போது சுமார் 2 லட்சம் தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் தீவிரவாத அமைப்பின் ஒரு பகுதி அழிந்துவிட்டது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பாவில் இருந்து சிரியா, ஈராக் வந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தீவிரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் ஐரோப்பியர்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள்.

சிரியா

சிரியா

சிரியாவில் உள்ள தீவிரவாதிகளின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மூலம் பலரை அமைப்பில் சேர்த்து வருகிறது ஐஎஸ்ஐஎஸ். எத்தனை பேரை ஒருவர் சேர்த்துவிடுகிறாரோ அவருக்கு அவ்வளவு பணம் அளிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+