ராணுவ வீரரை சிறைப் பிடித்தது ஹமாஸ் - இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு - 40 பாலஸ்தீனியர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. அவரை மீட்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் முயற்சியால் அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தமும் முறிந்து போனது. ஹமாஸ் நிலைகளைக் குறி வைத்து கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த அதிரடித் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Israeli army fears soldier captured in Gaza

காஸா முனையின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணியில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகியுள்ளது.

போர் நிறுத்தம் முறிந்தது

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஐநா முயற்சியால் அமல்படுத்தப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தம் முறிந்துள்ளது. பாலஸ்தீன நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஆனால் செத்து விழுவது என்னவோ அப்பாவி பாலஸ்தீனியக் குழந்தைகளும், பிறரும்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+