யுத்த நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் வெறியாட்டம்: ஒரே நாளில் 160 பேர் பலி!
காஸா: யுத்த நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
காஸா பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் கண்மூடித்தனமாக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 1,500 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், பிஞ்சு குழந்தைகள்.

2 லட்சம் அகதிகள்
சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் அந்த பள்ளிகள் மீதும் ஈவிரக்கமின்றி தாக்குதலை நடத்தி வருகிறது.

3 நாள் யுத்த நிறுத்தம்
இந்த தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்திய பின்னரும் இஸ்ரேல் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 3 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரே நாளில் 160 பேர் பலி
ஆனால் யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வெறியாட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 160 பாலஸ்தீனர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

ரஃபா, கான் யூனிஸ் மீது தாக்குதல்
காஸாவின் ரஃபா பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள், கான் யூனிஸ் பகுதி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 51 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இதனால் இஸ்ரேல் வீரர்களின் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்கள்
மேலும் ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐநா மற்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications