"சூப்பர் மெஜாரிட்டி.." ஜப்பானில் கிளீன் ஸ்வீப் வெற்றி.. மொத்தமாக அள்ளிய சானே தகைச்சி.. மோடி வாழ்த்து
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இன்று பொதுத் தேர்தல் நடந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி சூப்பர் மெஜாரிட்டியை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை பிரதமராக இருந்தவர் எல்டிபி கட்சியின் ஷிகெரு இஷிபா. இருப்பினும், இரு முக்கிய தேர்தல்களில் எல்டிபி கட்சி தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகினார். இதையடுத்து அக்டோபர் 2025-இல் சானே தகைச்சி பிரதமராகப் பதவியேற்றார்.

ஜப்பான் தேர்தல்
இருப்பினும், அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, தனது கொள்கைகளுக்கும் மக்களிடம் நேரடி அங்கீகாரம் பெற அவர் விரும்பினார். அதற்காக அங்குள்ள கீழ் சபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிப்ரவரி 8ம் தேதி அங்குத் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முந்தைய தலைவர்களால் எல்டிபி கட்சிக்குப் பெற முடியாத வெற்றியை சானே தகைச்சி பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். அவரது வெற்றிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து
இதற்கிடையே ஜப்பான் தேர்தலில் வென்ற சனே டகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா- ஜப்பான் இடையேயான உறவு உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் கூறினார். சனே டகைச்சிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சனே டகைச்சி! இந்தியா ஜப்பான் இடையேயான சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை, இந்தியா ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மிகப் பெரிய வெற்றி
ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில், சனே டகைச்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அவரது லிபரல் டெமாக்ரடிக் கட்சி (எல்.டி.பி) ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உள்ள கீழ் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியது. 465 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டி வென்றது.
ஏன் முக்கியம்
அவர்கள் கட்சி 310 இடங்களில் வென்றது. இதன் மூலம் எல்டிபி கட்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி கிடைத்துள்ளது. சூப்பர் மெஜாரிட்டி இருப்பதால் எல்டிபி கட்சியால் மேல்சபை முடிவுகளைக் கூட மாற்றி அமைக்க முடியும். மேல்சபையில் எல்டிபி கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் இருந்த சூழலில், சில சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அந்தச் சிக்கலும் முழுமையாக நீக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய டகைச்சி, தனது கொள்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக ஜப்பான் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கத் தொடங்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications