திடீரென வெடித்த ஜப்பான் எரிமலை... 36 சடலங்கள் மீட்பு - நச்சு வாயு பரவுவதால் மீட்புப் பணியில் தொய்வு
டோக்கியோ: ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன. இதற்கிடையே எரிமலையிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதாக வெளியான தகவலால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் உள்ளது ஓன்டாகே எரிமலை. அமைதியாக இருக்கும் இந்த மலையின் மீது மலையேற்றக் குழுவினர் பயிற்சி பெறுவது வழக்கம்.

அவ்வாறு நேற்று முன்தினம் அம்மலையில் சுமார் 250க்கும் அதிகமான வீரர்கள் மலையேறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் மலையேற்ற குழுவினர் சிக்கிக் கொண்டனர்.
இதன் விளைவாக வெளிப்பட்ட தீயின் பிழம்புகளும், சாம்பல் மேகங்களும் அம்மலையின் தென்பகுதியில் மூன்று கி.மீ தொலைவு வரை பரவின. எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியான சாம்பல் திட்டுகள் மேகங்களில் கலந்து, அப்பகுதி முழுவதையும் இருளில் ஆழ்த்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மீட்புப் படையினர். ஆயினும் மலையின் சரிவுப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. சிலர் மட்டுமே தங்களது சொந்த முயற்சியில் மலையை விட்டு மெல்ல இறங்கி தரைப்பகுதியை வந்தடைந்தனர்.
நேற்று மட்டும் சுமார் 30 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டனர். இன்று மேலும் 6 சடலங்களை அவர்க மீட்டுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் எரிமலையில் இருந்து வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயங்கி உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பலுக்குள் புதைந்து காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மலையின் மேல்பகுதியில் சுழன்றடிக்கும் காற்றில் கலந்து, பறந்து வரும் சாம்பலில் இருந்து ஒருவித நச்சுவாயுவும் கலந்துள்ளதால் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications