துபாயில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
துபாய்: துபாயில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் துபாய் அம்மா பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.
காராமா பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அம்மா பேரவை தலைமை நிர்வாகி கே. சி. சக்திவேல் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தலைமைக் கழகம் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை 28 ஆம் தேதி வரை கொண்டாட உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் காரணமாக அமீரகத்தில் இந்த விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். ஆர். கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாபு, பாபநாசம் சாகுல் ஹமீது, எஸ். அசதுல்லா, ராஜி ஆர். பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் யமுனாலிங்கம், விஜயராணி ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் பங்கேற்றனர்.
விழாவில் அம்மா பேரவையின் முருகன், சங்கர், துரைசாமி, ராஜவேல், செல்வகுமார், அருணா, வேல்முருகன், செல்வி சக்திவேல், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜி. செல்வக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.
முன்னதாக பர்துபாய் சிவன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications